வெள்ளி, 16 டிசம்பர், 2011

காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி தவ்ஹீத் வாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களின் செயல்பாடுகள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை


இப்போது துபாயில் பணிபுரிந்து வரும் காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி வஹ்ஹாபிய சிந்தனையிலிருந்து முற்றிலும் விடுபட்டு சுன்னத்-வல்ஜமாஅத்- அகீதாவின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொன்டு இஸ்லாமிய பணிகளை செவ்வனே செய்து வருகிரார்  அவரது மன மாற்றத்திற்கு என்ன காரணம் அவரே விளக்குகிரார்--- தவ்ஹீத் வாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களின் செயல்பாடுகள்   எதுவும் எனக்கு பிடிக்கவில்லை  குறிப்பாக  இமாம்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பது  அறவே பிடிக்க வில்லை எதற்கெடுத்தாலும் இவர்கள் குர்.ஆன், ஹதீஸ் மட்டும் போதும் எனக் கூறுகிரார்கள் ஆனால் இஜ்மா என்று ஒன்று இருக்கிறது அதையும் எடுக்க வேண்டும் ரசூலுல்லாஹ் ஸஹாபாக்களையும் பின்பற்றத்தான் சொல்லி இருக்கிறார்கள்  ஆனால் இவர்கள் ஸஹாபாக்களையே  ஏத்துக்கலையே இமாம்களை எப்படி ஏத்துப்பாங்க? குர்.ஆன், ஹதீஸ் மட்டுமல்ல ஸஹாபாக்களையும் இமாம்களையும்  ஏத்துக்கணும் என்பது தான்  என்னுடைய கருத்து அதுதான் சரியான இஜ்மாவாக இருக்க முடியும் ஸஹாபாக்கள் கூறுவது கூட ஹதீஸின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது  இது இந்த தவ்ஹீத் வாதிகளுக்கு  தெரிந்தும் தெரியாததுபோல் ஏன் நடிக்கிறார்கள்  என்பது தான் புரியவில்லை -ஸஹாபாக்கள் தான் இஸ்லாத்தின் உன்மையை தெரிந்தவர்கள்  அவர்கள் ஒரு போதும்  இஸ்லாத்திற்கு மாற்றமாக பேசமாட்டார்கள் ரசூலுல்லாஹ் குர்.ஆனைக் கொன்டு வந்தார்கள் ஹதிசுகளைச் சொன்னார்கள்  சரிதான்  அவற்றை மக்களிடம் கொன்டு வந்து சேர்த்தவர்கள் ஸஹாபாக்கள் தான் என்பதை மறந்து விடக்கூடாது. ஸஹாபாக்களிடம் கற்றவர்கள் தான் தாபியீன்கள், அதன் பிறகு  தபஹதாபீயீன்கள் ,அவர்களைத் தொடர்ந்து இமாம்கள் இவர்கள்  வழியாகத்தான் இஸ்லாமிய  மார்க்க கல்வி நமக்கு கிடைத்திருக்கிறது 1 ) ஸஹாபாக்களால் தான் குர்.ஆனே தொகுக்கப்பட்டது   ஸஹாபாக்கள் முயற்சி எடுக்கவில்லை என்றால் இன்று குர்.ஆனே நம்மிடம் இருக்காது 2) இன்று ஸஹாபாக்களை குறை கூறுபவர்கள்  குர்.ஆனுக்கு தர்ஜமா எழுதி அதை காசாக்கியிருக்கவும் முடியாது  இஸ்லாமும் குர்.ஆனும் காசாக்குவதற்காக வந்த மார்க்கம் அல்ல  3) தாங்கள் சொல்வதும் செய்வதும் தவறு என்று அவர்களுக்கே  தெரிந்திருக்கிறது ஆனாலும் திருந்த மனம் வரவில்லை அவர்களுக்கு சமுதாயத்தின் மீதோ முஸ்லீம்களின் மீதோ  எந்த பற்றுதலும் கிடையாது அவர்களுக்கு  வயிற்றுப்பாட்டின் மீது தான் உண்மையான பற்றுதல் 4) இவர்களின் குரூரமான  எண்ணங்களை புரிந்து கொள்ளாத ஓர் இளைஞர்  கூட்டம் இவர்களை பின் பற்றுகிறது என்பது தான் வேதனை  இந்த மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள் அறியாமையிலிருந்து  இவர்களை மீட்டெடுக்க வேன்டும் 5) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ''''  மார்க்க அறிஞர்களை கைப்பற்றுவதன் மூலம் மார்க்க அறிவை இறைவன் உயர்த்திக்கொள்வான் அறிவீனர்கள் இருப்பார்கள் மக்கள் அவர்களிடத்தில் சென்று மார்க்க தீர்ப்பு கேட்பார்கள்'' இதற்கு  என்ன பொருள் என்றால் சில அறிவீனர்கள் தங்களை பெரிய மார்க்க அறிஞர்களைப் போல காட்டிக் கொள்வார்கள் வாய்ச் சொல்லில் வீரர்களாக இருப்பார்கள் அந்த பேச்சில் மயங்கிய மக்கள் '' ஓகோ இவர் பெரிய மார்க்க அறிஞராக இருப்பார்'' என்று எண்ணி அவரிடம் சந்தேகங்களை கேட்பார்கள் (6) மேலும் நபி(ஸல்) சொன்னார்கள் ''  மார்க்க அறிவே இல்லாமல் அவர்கள்   மார்க்க தீர்ப்பு வழங்குவார்கள்   அவர்கள்  தாங்களும் வழி கெட்டு  மக்களையும் வழி கெடுப்பார்கள்   இப்போது இது தான் நடந்து கொன்டு இருக்கிறது   இந்த அளவுக்கு ரசூலை விட மேலாக தன்னை மதிக்கக் கூடிய ஒரு கூட்டத்தை இவர்கள் உருவாக்கி வைத்திருக்கிரார்கள்   இவர்கள் கூறும் விளக்கம் மட்டுமே உண்மையானது என்று இவர்களை பின்பற்றும் கூட்டத்தினர்  கண்மூடித்தனமாக நம்புகின்றனர் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கிற மோசமான நிலை இது இவர்கள் எல்லோரும் இறைவனுக்கு  பதில் சொல்லியே ஆக வேன்டும் ஸஹாபாக்களும், இமாம்களும் கூறியதை மறுத்து இந்த புதுமைவாதிகளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்கள் நாளை இறைவனிடம் எந்த பதிலும் கூற முடியாது  (7) 1985, 86 வாக்கில்  மயிலாடுதுறையில் வைத்து பி-ஜெய்னுல் ஆபிதீனை கமாலுதீன் மதனிக்கு அறிமுகம் செய்து வைத்தவன் நான்  அப்போது கமாலுதீன் மதனி, இக்பால் மதனி, போன்றவர்கள்  நாங்கள் மதினாவில் படித்து விட்டு  அங்கே பணம் வாங்கிக் கொண்டு  இங்கே வஹாபியிஸத்தை பரப்புவதாக மக்கள் நினைக்கிறார்கள்  அதனால்  நாங்கள் பேசுவதற்கு சரியான பலன் கிடைக்க வில்லை இங்கே லோக்கலில்   நன்றாக பேசுபவர்கள்  யாராவது இருந்தால் சொல்லுங்கள் '' என்று கேட்டார்கள் அப்போது தான் ----P-ஜைனுல் ஆபிதீன் ------ஐ அறிமுகம் செய்து வைத்தேன்  அண்ணன், தம்பி,இரண்டு பேர் மூத்தவர்  சலாஹுத்தீன் மன்ப.ஈ அவரை நாங்கள் படுத்துகிரோம் இளையவர் ஜைனுல் ஆபிதீனை நன்றாக பேசுவார் நீங்கள் பயன் படுத்திகொள்ளுங்கள் என்றேன் கோட்டாறில் நடந்த முனாளராவில் பிஜே யை  முதன் முதலாக மேடையேற்றி பேச வைத்தார் கமாலுதீன் மதனி அதன் பிறகு விவாதம்  1 நடைபெற்றது வலிமார்களிடம்  வஸிலா தேடலாமா? என்பது போன்ற விஷயங்கள் விவாதிக்கப் பட்டன அதில் P-J - கமாலுதீன் மதனி, அபூ அப்துல்லா,உட்பட பலர் கலந்து கொண்டார்கள் இந்த விவாதத்தை அபூ அப்துல்லா  தனது நஜாத் பத்திரிக்கையில் முழுமையாக வெளியிட்டார் பிறகு அது 6, 7, கேஸட்டுகளாகவும் வெளிவந்தது அவை அரபு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டு தமிழ் முஸ்லீம்களிடம் பிரபலமாக்கப் பட்டது அதன் பிறகுதான்  இந்த இயக்கம் துளிர் விட ஆரம்பித்தது  அதன் பிறகு தான் பிஜே பிரபலமானார்கள்  (8)  ஒரு பெரியவரிடம் போய் ஒருவன்'' நான் பெரிய ஆளாவதற்கு என்ன செய்யனும்? என்று கேட்டார் பெரியவர் சொன்னார் அறிஞர்கள் எதைக் கூறினாலும் அதைத் தவறு என்று கூறு நீ பிரபலமாகி விடுவாய்? அந்த டெக்னிக்கைத்தான்  இவர்கள் கையாண்டு வருகிரார்கள் (9) மக்கள் தங்களை பெரிய  மேதைகளாக நினைக்க வேண்டும் என்பதற்காக  உண்மையான மேதைகளை தறக்குரைவாக பேசுவது புதிய  கருத்துக்களை  உண்மையைப் போல் உரத்து  கூறுவது  போன்ற கீழ்த்தரமான காரியங்களை செய்து கொன்டிருக்கிறார்கள் உதாரனம் ''ஒளு இல்லாமல் குரானை தொடலாம் '' சொல்பவர் கமாலுதீன் மதனி  2 ஒளு  இல்லாமல் குரானை தொடுவது கூடாது'' என்று சொல்பவர் அதே கொள்கையை கடைபிடிக்கும் இக்பால் மதனி சில திருமணங்களில்  குத்பா ஓதுவது  சில திருமணங்களில்  குத்பா தேவை இல்லை என்று கூறுவது, சவுதி பிறையை ஏற்றுக்கொள்வது, சிலர் ஏற்றுக் கொள்ளக்கூடாது என இவர்களுக்குள்ளே யே ஏகப்பட்ட குளறுபடிகள் ( 10)  1990 வாக்கிலேயே அந்த கூட்டத்தின் செயல் பாடுகளிலிருந்து ஒதுங்கி விட்டேன். சுன்னத் -வல்- ஜமாஅத் அகீதாவின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொன்டேன் . இவர்களது குளறுபடிகளை கூட இருந்தே கண்டு உணர்ந்தவன் என்ற முறையில் தமிழக முஸ்லீம்களுக்கு நான் கூற விரும்புவது இது தான் 11) கவர்ச்சிகரமான பேச்சுக்களையும் மற்றவர்களை அதிரடியாக தாக்கி பேசுவதையும் நம்பி,அந்த பேச்சுக்களில் மயங்கி, வழி தவறி விடாதீர்கள் குர்.ஆன் ஹதீசுக்கு மேலாக தனி நபர் ஒருவருக்கு முக்கியத்துவம் தராதீர்கள்  12) இஸ்லாம் தர்க்க ரீதியான மார்க்கம் அல்ல ,இஸ்லாம் இரண்டு விஷயங்களால் அடையாளப்படுகிறது ஒன்று கொள்கை மற்றொன்று அமைப்பு
இஸ்லாமியக் கொள்கைகளைப் பற்றி, ஷரியத், பிக்ஹீ சட்டங்களைப் பற்றி விளக்குபவர்கள் தரமுள்ள அறிஞர்களாக இருக்க வேண்டும் தரம்  முக்கியம் நானும் மதரஸாவில்  படித்து விட்டு வந்தேன்  எனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது என்று யாராவது வந்து பேசினால் அதை வாயை பிளந்து கொண்டு கேட்டுக் கொன்டிருப்பது தப்பு  அது தான் இன்றைக்கு நடந்து கொன்டிருக்கிறது   உதாரணமாக, ஜக்காத் சட்டங்கள்- ஜகாத்தை ரசூலுல்லாஹ் எப்படி வழிமுறைப் படுத்தினார்கள் ஸஹாபாக்கள் அதை எப்படி செயல் படுத்தினார்கள் என்பது பிக்ஹீ சட்டத்தின் அடிப்படை. அந்த சட்டத்தின் அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் ஆயுளில் ஒரு முறை ஜக்காத் கொடுத்தால் போதும் என்று கூறுகிரார்கள் --பிலால்-- பிலிப்ஸ்--  ஏராளமான ஆதாரங்களோடு அழகான ஒரு புத்தகம் ஜகாத்தை பற்றி வெளியிட்டார் இன்டர் நெட்டிலும் வந்தது அதற்கு இதுவரை யாரிடமிருந்தும் பதிலில்லை  -- இந்த வழிகேடர்களைப் பற்றி இறைவன் தெளிவாக கூறுகிரான் '' நுறை இருக்கிறதே, அது குமுழியாகப் போய்விடும் மக்களுக்கு பலனளிக்கக்கூடியது இருக்கிறதே- அது தான் நிலைத்து நிற்கும்'' நிலைத்து நிற்பது சுன்னத்- வல் - ஜமாஅத்- கொள்கைகள். 


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக