Subject: 2 1/2 சதவீதம் ஏழைக்கு கொடுத்தால் 97 1/2 காக்கப்படும்
| அகீமுஸ்ஸலாத் வஆதுஸ்ஸகாத்த தொழுகையை நிலை நிறுத்தி(த் தொடர்ந்து தொழுது) வாருங்கள்! மேலும் ஜக்காத்தும் கொடுத்து வாருங்கள்!அல்லாஹ் குர் ஆன் ஷரீபில் தொழுகையைப் பற்றி கட்டளையிடும் போதெல்லாம் ஜக்காத்தையும் இணைத்தே கூறுவது சிந்திக்கத் தக்கது கலிமாவில் லாஇலாஹ இல்லல்லாஹ் வை தொடர்ந்து முஹம்மதுற்றசூலுல்லாஹ் எவ்வாறு இணை பிரியாமல் தொடர்ந்து வருகிறதோ அதே போல தொழுகையும் ஜக்காத்தும் பின்னிப் பிணைந்தே மார்க்கத்தில் வலியுறுத்தப்படுகிறது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் கலிமா- தொழுகை- நோன்பு - ஹஜ்ஜு இந்த நான்கும் இறைவனோடு தொடர்பை ஏற்படுத்திச் செய்யும் அமல்கள் ஆனால் ஜக்காத்து மட்டும் மனிதர்களின் தொடர்பு இல்லாமல் நிறை வேற்ற முடியாத கடமையாக தனித்தன்மை பெறுகிறது ஏழைகளுக்கு வழங்குவதை அவர்கள் துன்பம் துடைப்பதையே ஓர் இபாதத்தாக - இறை வணக்கமாக- தனக்குச் செய்த உபகாரமாக- அல்லாஹ் அங்கீகரிப்பது மிகவும் ஆராயத்தக்கது சதக்காவுக்கும் ஜக்காத்துக்கும் வித்தியாசமுன்டு- சதக்கா ( தர்மம்) கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் ஆனால் ஜக்காத்தோ கொடுக்காவிட்டால் இறை தண்டனைக்கு ஆளாக வேண்டி வரும் மனிதர்கள் இரண்டு பிரிவுகளில் அடங்கி விடுவர் ஒன்று ஏழை; மற்றொன்று பணக்காரர் . இந்த இரண்டுவகைத் தன்மைகளுக்கும் மனிதர்களில் மாறி மாறி வரக்கூடியது ஏழை ஒரு நாள் பணக்காரராகவும் , சீமான் ஒரு நாளில் ஏழையாக மாறிடவும் வாய்ப்புண்டு ஏழை ஒரு காலத்தில் சீமானாககும் போது தான் இருந்த ஏழ்மை நிலையை உணர்வதற்காகவும்- சீமான் ஒரு காலத்தில் ஏழையாகும் போது சீமானாக இருந்து வழங்கிய ஜக்காத்தின் புண்ணியம் அந்த ஏழ்மை நிலையில் உதவவும் வாய்ப்பாகிறது ஆனால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் ஜக்காத்து கொடுப்பதன் காரணத்தால் - ஏழையாகி விட மாட்டான் என்று நற்செய்தி கூறியுள்ளார்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பொருளாதாரப் புரட்சி சமூகத் திட்டத்தை அருளிய அல்லாஹ்வும் இதனை அமுல் படுத்திய அண்ணல் நபி( ஸல்) அவர்களும் இதில் பல நுணுக்கமான விஷயங்களைப் பொதிந்து வைத்திருக்கிறார்கள் அது பின் வருமாறு 1- ஜக்காத்து வழங்கும் செல்வந்தன் ஏழைக்கு வழங்கும் போது அல்லாஹ்வின் பரக்கத்தை ஏழைக்கு கொண்டு சேர்க்கும் இறைவனின் பிரதி நிதியாக மாறிப் போகிறான் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக