செவ்வாய், 27 டிசம்பர், 2011
முஸ்லிம் உலகம்: இஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்: உலகில் ...
முஸ்லிம் உலகம்: இஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்: உலகில் ...: 1.மிதக்கும் பள்ளிவாசல்-மலேசியா நீரால் சூழப்பட்ட ஒரு தீவைப்போன்று கோட்டா கின்பாலு பள்ளிவாசல் அமைந்துள்ளது.பள்ளிவாசலின்விம்பம் நீரி...
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
வெள்ளி, 23 டிசம்பர், 2011
ஹலோ, இணையத்தில் வலம் வருபவரே! உங்களைத்தான்!!
| ||||||
வியாழன், 22 டிசம்பர், 2011
பத்ர் களம்: சஊதி நிதியும் சதியும்
பத்ர் களம்: சஊதி நிதியும் சதியும்: சஊதி நிதியும் சதியும் முஸ்லிம்களைப் பிளவுபடுத்தும் மூல மந்திரம்! சஊதி நிதி இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சிந்தனைக் குழப்பங...
ஹஜ்ஜும் வலிகளோடு மீண்டுவந்த ஹாஜிகளு...
பத்ர் களம்: வர்த்தக மயமான ஹஜ்ஜும் வலிகளோடு மீண்டுவந்த ஹாஜிகளு...: இலங்கையிலிருந்து மக்கா சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை முறைப்பாடுகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதன் ...
செவ்வாய், 20 டிசம்பர், 2011
| ஐரோப்பாவில் புதிய இறை இல்லங்கள் உதயம் |
ஃபிரான்ஸின் 'Marseille - மர்ஸை'யில் புதிய மஸ்ஜித்
''அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)'' (அல் குர் ஆன் 9:33)
இஸ்லாத்துக்கு எதிராக என்னென்ன பொய் மூட்டைகளை அவிழ்த்து விட முடியுமோ அவ்வளவையும் மிக சாமர்த்தியமாக மேற்கத்திய நாடுகளின் அரசும் அவைகளின் ஊடகங்களும் செய்துகொண்டிருக்கும் அதே வேளையில் ஏக வல்ல அல்லாஹ், அவர்களின் அத்தனை சூழ்ச்சியையும் தவிடுபொடி ஆக்கியே வருகிறான் என்பதற்கு அந்நாடுகளில் இஸ்லாம் அதி வேகமாக பரவி வருவதே சாட்சியாக இருக்கிறது.மேலுள்ள திருக் குர் ஆனின் வசனம் கூட அதனை உறுதி செய்கிறது.
சுவிட்ஜர்லாந்தில் பள்ளிவாசல் மினாரா கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேளியில் ஐரோப்பாவின் மிக முக்கியமான இரு நாடுகளான ஜெர்மனியிலும், ஃபிரான்சிலும் புதிதாக இரு இறையில்லங்கள் இறையொளி(லி)யை ஓங்கச்செய்ய எழுந்துள்ளன. அதை நிரூபிக்கும் விதமாக ஃபிரான்சிலும் ஜெர்மனியிலும் புதிதாக உயர்ந்தோங்கி நிற்கும் புதிய 'மஸ்ஜித்'களே சாட்சி.
ஃபிரான்ஸில் மிகப்பெரிய பள்ளிவாசல்
பெண்ணியத்திற்கு கண்ணியம் அளிக்கும் ஹிஜாபை தடை செய்ய முயன்றுகொண்டிருக்கும் பிரான்ஸின்Marseille - மர்ஸை (ஃபிரென்ச் உச்சரிப்பு இதுதான்) என்ற நகரத்தின் செயின்ட் லூயிஸ் என்ற பகுதியில் மிகப்பெரிய பள்ளிவாசல் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்நகரத்தில் மட்டும் சுமார் 2,50,000 முஸ்லிம்களும் ஃபிரான்ஸ் முழுமைக்கும் சுமார் 60 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 2012 ஆம் ஆண்டு திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் 22 மில்லியன் யூரோமதிப்பிலான இப்பள்ளியில் குர் ஆன் வகுப்புகள், நூலகம், உணவு மற்றும் தேநீர் விடுதிகள் உள்ளடங்கியதாக இருக்கும்.
ஒரே நேரத்தில் சுமார் 7000 பேர் தொழுகை நடத்த முடியும். இப்பள்ளியில் அமையயுள்ள மினாராவானது 25 மீட்டர் (82 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். ஃபிரான்ஸ் அரசு இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக எத்தனை எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த இயலாது என்பதற்கு இது ஒரு சான்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெர்மனியில் புதிய இறை இல்லம் உதயம்
துருக்கியர்கள் அதிகமாக வாழும் பெர்லின் நகரின் குரூஸ்பெர்ங் பகுதியில் சுமார் பத்து மில்லியன் யூரோசெலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இப்பள்ளியின் கோபுரம் முழுமையும் கண்ணாடிகளால் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் ஆறு அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ள இப்பள்ளியில் நான்கு சிறிய மினாராக்களும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் நபர்கள் இங்கே தொழுகைநடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இறை இல்லத்திற்கு லெபனான் மற்று பாலஸ்தீனத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முழு பொருளூதவி அளித்துள்ளனர் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இதுபோன்று இன்னும் ஆயிரம் ஆயிரம் இறை இல்லங்கள் உலகம் முழுக்க கட்டியெழுப்பவும், அனைத்து இறை இல்லங்களும் முஸ்லிம்களால் நிரம்பிவழியவும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.
|
__,_._,___
ஞாயிறு, 18 டிசம்பர், 2011
பெற்றோர்களே சற்று நில்லுங்கள்
Subject: FW: பெற்றோர்களே சற்று நில்லுங்கள்
|
2 1/2 சதவீதம் ஏழைக்கு கொடுத்தால் 97 1/2 காக்கப்படும்
Subject: 2 1/2 சதவீதம் ஏழைக்கு கொடுத்தால் 97 1/2 காக்கப்படும்
| அகீமுஸ்ஸலாத் வஆதுஸ்ஸகாத்த தொழுகையை நிலை நிறுத்தி(த் தொடர்ந்து தொழுது) வாருங்கள்! மேலும் ஜக்காத்தும் கொடுத்து வாருங்கள்!அல்லாஹ் குர் ஆன் ஷரீபில் தொழுகையைப் பற்றி கட்டளையிடும் போதெல்லாம் ஜக்காத்தையும் இணைத்தே கூறுவது சிந்திக்கத் தக்கது கலிமாவில் லாஇலாஹ இல்லல்லாஹ் வை தொடர்ந்து முஹம்மதுற்றசூலுல்லாஹ் எவ்வாறு இணை பிரியாமல் தொடர்ந்து வருகிறதோ அதே போல தொழுகையும் ஜக்காத்தும் பின்னிப் பிணைந்தே மார்க்கத்தில் வலியுறுத்தப்படுகிறது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் கலிமா- தொழுகை- நோன்பு - ஹஜ்ஜு இந்த நான்கும் இறைவனோடு தொடர்பை ஏற்படுத்திச் செய்யும் அமல்கள் ஆனால் ஜக்காத்து மட்டும் மனிதர்களின் தொடர்பு இல்லாமல் நிறை வேற்ற முடியாத கடமையாக தனித்தன்மை பெறுகிறது ஏழைகளுக்கு வழங்குவதை அவர்கள் துன்பம் துடைப்பதையே ஓர் இபாதத்தாக - இறை வணக்கமாக- தனக்குச் செய்த உபகாரமாக- அல்லாஹ் அங்கீகரிப்பது மிகவும் ஆராயத்தக்கது சதக்காவுக்கும் ஜக்காத்துக்கும் வித்தியாசமுன்டு- சதக்கா ( தர்மம்) கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் ஆனால் ஜக்காத்தோ கொடுக்காவிட்டால் இறை தண்டனைக்கு ஆளாக வேண்டி வரும் மனிதர்கள் இரண்டு பிரிவுகளில் அடங்கி விடுவர் ஒன்று ஏழை; மற்றொன்று பணக்காரர் . இந்த இரண்டுவகைத் தன்மைகளுக்கும் மனிதர்களில் மாறி மாறி வரக்கூடியது ஏழை ஒரு நாள் பணக்காரராகவும் , சீமான் ஒரு நாளில் ஏழையாக மாறிடவும் வாய்ப்புண்டு ஏழை ஒரு காலத்தில் சீமானாககும் போது தான் இருந்த ஏழ்மை நிலையை உணர்வதற்காகவும்- சீமான் ஒரு காலத்தில் ஏழையாகும் போது சீமானாக இருந்து வழங்கிய ஜக்காத்தின் புண்ணியம் அந்த ஏழ்மை நிலையில் உதவவும் வாய்ப்பாகிறது ஆனால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் ஜக்காத்து கொடுப்பதன் காரணத்தால் - ஏழையாகி விட மாட்டான் என்று நற்செய்தி கூறியுள்ளார்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பொருளாதாரப் புரட்சி சமூகத் திட்டத்தை அருளிய அல்லாஹ்வும் இதனை அமுல் படுத்திய அண்ணல் நபி( ஸல்) அவர்களும் இதில் பல நுணுக்கமான விஷயங்களைப் பொதிந்து வைத்திருக்கிறார்கள் அது பின் வருமாறு 1- ஜக்காத்து வழங்கும் செல்வந்தன் ஏழைக்கு வழங்கும் போது அல்லாஹ்வின் பரக்கத்தை ஏழைக்கு கொண்டு சேர்க்கும் இறைவனின் பிரதி நிதியாக மாறிப் போகிறான் |
ஏன் நடந்தது இந்த கர்பலா?(ஆஷுரா நாள்)
|
சனி, 17 டிசம்பர், 2011
வெள்ளி, 16 டிசம்பர், 2011
வந்தது வசந்தம்'
வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால்... பெருமானார்(ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம்) அவர்கள் மீது நேசம் கொன்ட முஸ்லீம்கள் பெருமானார் பிறந்த தின மீலாது விழாவிற்காக ஏற்பாடுகளைச் செய்யும் அதே வேளையில் ... மீலாது கொன்டாடக்கூடாது மெளலிது ஷரீபு ஓதத் தேவையில்லை என முஸ்லீம் பெயர் கொன்ட ஒரு கூட்டம் நாடி நரம்புகள் வெடிக்க கூக்குரலிடத் தொடங்கி விடும் அவர்களின் (வி) வாதம் என்னவென்றால்.. ஒவ்வொரு நேர பாங்கிலும்- ஒவ்வொரு நேரத்தொழுகையிலும்-ஏன் ஒவ்வொருஅசைவிலும் நாயகம் (ஸல்)அவர்களை நினைவு படுத்திக் கொன்டிருக்கும்போது... தனியாக அவர்களை நினைவு படுத்த விழாக்கள் தேவையா? என்பதுதான். அவர்களுக்கு நாம் கூறுவது இதுதான்' ( 1) இந்த பாங்கை- இந்த தொழுகையை- இஸ்லாமியர்களின் நெறிவாழ்வைப் பெற்றுத் தந்த பெருமானார்(ஸல்) அவர்கள் இவற்றை எப்படி பெற்றார்கள்? இவற்றைச் செயல் படுத்த- சீர் படுத்த அவர்கள் எத்தகைய தியாகங்கள் புரிந்தார்கள் ? இந்த சமுதாயத்தை நிறுவ முற்பட்டபோது அவர்களிடமிருந்து என்னென்ன அருமையான அற்புதமான நற்குனங்கள் உலகுக்கு கிடைத்தன? அந்த அரிய அற வாழ்வை-அற்புதமான வ்ரலாற்றை நாம் தெரிய வேன்டாமா? அதனை உலகுக்கு தெரியச் செய்ய வேன்டாமா? (2) மீலாது விழா மேடைகள் இந்த சிறப்பானபணியைத்தான் செய்து கொன்டிருக்கின்றன (3) இறைவா' நீ உன் அருமைத் தூதரை அனுப்பிய மகிழ்சியை கொன்டாட என் நேரத்தை செலவழித்தேன். உன் இறுதித் தூதரின் விழாவைக் கொன்டாட என் ஹலாலான வருமானத்தைச் செலவு செய்தேன் என்று கூறும்போது.... இறைவன தண்டனையா கொடுப்பான்? பாராட்டி பரிசு மழையையல்லவா பொழிவான் எனவே வ்வொரு இல்லங்களிலும் மெளலிதுஷரிபு ஓதும் ஓசை ஒலிக்கச்செய்வோம் ஒவ்வோர் ஊரிலும்- மஹல்லாக்களிலும் மீலாது நடத்தி உத்தம நபியின் உதய தின விழாவைக் கொன்டாடுவோம் அன்புடன் சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர் விழிப்புணர்வு இயக்கம் -அமீரகம்( நன்றி எல் ஐ டி இஸ்லாமிய தமிழ் மாத இதழ்)
|
காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி தவ்ஹீத் வாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களின் செயல்பாடுகள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை
|
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)